Friday 23 September 2016

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

    படம் : இளமை ஊஞ்சலாடுது
    பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    ________________________________

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்


    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
    ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர


    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிறேண்டிலும் ஒரே லயம்
    இரவும் பகலும் இசை முழங்க


    ஒரே நாள் ……..
    உன்னை நான் ……….
    நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஊஞ்சலாடுது …
    அஹ அஹ அஹ ஆஹா

No comments:

Post a Comment