Friday 23 September 2016

மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி

படம் :அவளுக்கென்று ஒரு மனம்
பாடகர்கள் : SPB,PS
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : MSV
நடிப்பு : ஜெமினி , காஞ்சனா



மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ அடிமை i நான் உன் ராணி

(மங்கையரில்)

மையோடு கொஞ்சம் போய் பேசும் கண்கள்
கையேடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்விகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பட வந்தேன் ஆனந்தப் பட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ ஞானம் மெல்லத் தடை போடா

(மங்கையரில்)

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நுறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் திரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே நானும் கொஞ்சம் கவிபாட

(மங்கையரில்)

No comments:

Post a Comment