Friday 23 September 2016

அமுதைப் பொழியும் நிலவே

திரைப்படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கல்யாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா



அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ? 

No comments:

Post a Comment