Friday 23 September 2016

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

படம் : ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)
இசை : விசுவநாதன் - ராமமூர்த்தி
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
பாடல் : கண்ணதாசன்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

………..அதோ அந்த பறவைபோல……………..

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

……….அதோ அந்த பறவை போல……… 

No comments:

Post a Comment