Friday 23 September 2016

உலகம் பிறந்தது எனக்காக....

    படம் : பாசம்
    இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடல் : கண்ணதாசன்
    பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்



    உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
    கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நான் அறிவேன்
    என்னை அவனே தான் அறிவான்

    தவழும் நிலவாம் தங்கரதம்
    தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
    கொண்டது எனது அரசாங்கம்

    எல்லாம் எனக்குள் இருந்தாலும்
    என்னை தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில்
    அவளே என்றும் என் தெய்வம்

No comments:

Post a Comment