Friday 23 September 2016

இயற்கை என்னும் இளைய கன்னி

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளனீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை) 

No comments:

Post a Comment