Friday 23 September 2016

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

    படம : அடுத்த வீடு பெண்
    இசை: ஆதி நாராயண ராவ்
    பாடல் : T.N. ரமையாஹ் தாஸ்
    பாடியவர் : P.B.Srinivas


    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    காதலே கேட்டு கேட்டு கொள்ளாதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே)

    பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
    பக்தன் உள்ளம் நிதம் ஏங்கி வாடுதே
    ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
    என் அன்னமே, உன் பின்னல் ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே)

    பதுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வழியிலே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ

No comments:

Post a Comment