Friday 23 September 2016

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

    படம் : வேட்டைக்காரன்
    இசை : K.V.மகாதேவன்
    பாடல் : கண்ணதாசன்
    பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்

    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்
    (உன்னை)

    மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா
    தன்னை தானும் அறிந்து கொண்டு
    ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
    (உன்னை)

    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

No comments:

Post a Comment