Friday 23 September 2016

அழகே வா... அருகே வா...

படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964



அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..

அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே

No comments:

Post a Comment